Tuesday, August 24, 2010

தடுப்புக் காவல் கைதி -தஸ்லிமா நஸ்ரின்


தடுப்புக் காவல் கைதி
~~~~~~~~~~~~~~~~~~~~~

எப்போதேனும் தடுப்புக் காவல் கைதியாக
நீங்கள் இருந்திருந்தால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

எப்போதேனும் உங்களது கால்கள்
விலங்குகளால் பிணைக்கப்பட்டிருந்தால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

எவரேனும் அறையை விட்டு வெளியில் போகும்போது
நீங்கள் இருக்கிற அறை உள்ளிருந்து அல்லாமல்
வெளியிலிருந்து தாழிடப்படுமானால்
என்னை நினைத்துப் பாருங்கள்.

சுற்றிலுமுள்ளவர்கள் எங்கிருந்தாலும்
எவராலும் எனது குரலைக் கேட்க முடியாது
உங்களது வாய் இறுகக் காட்டப்பட்டிருக்கும்
உங்கள் உதடுகள் தைக்கப்பட்டிருக்கும்
நீங்கள் பேச விரும்பினால் அது உங்களால் முடியாது
நீங்கள் பேசினாலும் எவரும் கேட்க முடியாது
எவரேனும் அதனைக் கேட்க நேர்ந்தாலும்
அதனைப் புறக்கணிப்பர்.

என்னைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
எவரேனும் கதவைத் திறப்பார்கள்
எவரேனும் விலங்குகளிலிருந்து விடுவிப்பார்கள்
எவரேனும் தைக்கப்பட்ட உதடுகளைப் பிரிப்பார்கள் என
நீங்கள் அவாவுற்றிருபது போலவேதான்
நானும் வேட்கையுருகிறேன்

மாதமொன்று போய்விட்டது
எவரும் இந்த வழியால் வரவில்லை
இந்தக் கதவு திறக்கப்படுமானால்
என்ன நடந்திருக்கும் என எவர் தான் அறிவார்
என அவர்கள் நினைத்திருக்கக் கூடும்

என்னைப் பற்றி யோசித்துப் பாருங்கள்
கடுமையாக உங்களுக்கு வலிக்கும்போது
நான் இதை எப்படி இதனை அனுபவித்திருப்பேன் என்பதை
நினைத்துப் பாருங்கள்


ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் வைக்க வேண்டும்
காரணமில்லாமல் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்பட்டவர்
எவராக இருக்கலாம்
அது நீங்களாகவும் இருக்கலாம் எனில்
நானும் நீங்களும் எல்லோரும் ஒன்று தான்
கொஞ்ச நஞ்சமான வித்யாசமும் இல்லை

நீங்கள் என்னைப் போன்றவர்தான்
ஒரு மனிதனுக் காகக்காத்திருப்பவர்
இருள் மண்டிக்கொண்டிருக்கிறது
எந்த மனிதனும் வரவில்லை.

தஸ்லிமா நஸ்ரின் -
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்

இது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்


இது எனது நகரம் இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னுடையது என ஒரு போதும் நான் சொல்லிக் கொண்ட
மாதிரியிலான நகரம் இல்லை இது.
குள்ளநரித் தனமான அரசியல்வதிகளுடையது இந்த நகரம்
பழி பாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகளின்
சதை வியாபாரிகளின் கூட்டிக் கொடுப்பவர்களின்
பொறுக்கிகளின்,வன்புனர்வாளர்களின் நகரமேயல்லாது
இது எனது நகரமாக இருக்க முடியாது

வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும் ஊமை
சாட்சிகளாயிருப்பவர்களுக்கனது இந்நகரம்
எனக்கானது இல்லை

அயோகியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்
அனாதரவனவர்கள் குறித்த உணர்ச்சியற்று
பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்.

சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்
பிச்சைகாரர்கள் மடிகிறார்கள்.
தப்பித்தல்வாதிகளுடைய இந்த நகரம்
குறைந்தபட்ச இன்னல் என்றாலும்
அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது.
அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்
பேய்களின் நகரம் இது.

வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி
வீராவேசமாக இங்கு வாயடித்துக்கொண்டிருப்பார்கள்
முகத்துதிக்காரர்களின் நகரம் இது
தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்
சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது
இதனை ஒரு போதும்
எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்
இனி ஒரு போதும்

பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்
மதவெறி அயோக்கியர்கள்
இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்


விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய
ஆண்களும் பெண்களும்தான்
இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன்,
சுதந்திர சிந்தனைகளுடன்,
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு
இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது எனது நகரம் இல்லை தொகுப்பு

தஸ்லிமா நஸ்ரின் -இது எனது நகரம் இல்லை தொகுப்பு
மொழியாக்கம் யமுனா ராஜேந்திரன்